Saturday, January 19, 2013

ஏக்கம்

பொழுது சாயும் நேரம்

எனக்காக காத்திருக்கிறாள்

என்னை சுற்றி சுற்றி வலம் வருகிறாள்

பணி  களைப்பு தீர

அன்புடன் தழுவுகிறாள்

அவள் நடனம் தந்த ஆனந்தம் - அற்புதம்

மலரும் என் மென்மனம்

தொட்டு குளிர்விக்கின்றாள்

என்  உடலோடு உறவாடி

தாலாட்டு பாடி தூங்க செய்கிறாள்

 

பொழுது புலர்ந்தது, பகலவன் வந்தான்

அவளது கண்ணீர் துளி என் கன்னத்தில்

அவள்  எங்கே? கண்டவருண்டோ?

அவளை உணரமுடியவில்லை

ஏன் மறைந்தாள், இது அவள் விளையாட்டா ?

விலகி சென்றவள் மீண்டும் வருவாளா?

என் மேல் கோபமா, என் உயிரே

ஏ பனியே! என் இரவு நேர தோழியே

நான்  பூலோகத்தில் இருப்பது சிலகாலம் தான்

ஏன் விட்டு சென்றாய்- ஏங்கும் டிசம்பர் பூ

 

 

 

No comments: