Tuesday, November 9, 2010

கோடையின் வருகை


Description unavailable


இறைவா,

சுட்டெரிக்கும் சூரியன்

கொதிக்கும் புகலிடம்

வியர்வை குளியல்

அமைதியில்லா நித்திரை

குடைகளுடன் அழகிகள்

கதிரவன் கதிர்களால்

கருகும் கதிர்கள்

என

இயக்கமற்ற நொடிகளில்

உறைந்து நிற்கின்றோம்

உறைந்து நின்ற நீரும்

உருகி கரைந்தாயிற்று

கரைபுரண்டோடும் காட்டாறு

பச்சை புல்வெளிகள்

புன்சிரிப்புடன்  பூக்கள்

ஈசல்களின் கொண்டாட்டம்

தவளைகளின் இசைவிருந்து

யாவும் எங்கள்  கனவுகளே

கனவுகளை  நினைவாக்கும்

உன் அருளே

எங்கள் பிரார்த்தனை

No comments: