பச்சை புல்வெளி,
பொங்கும் நீல கடல்
வெள்ளை மணல்பரப்பு
கருமை நிற கூந்தல்
சிவந்த உதடுகள்
பல வர்ண பூக்கள்
சிவந்த மஞ்சள் நெருப்பு
எல்லாம் அற்புதமாக படைத்த
இறைவா, நிறங்களின் மன்னா
ஏன் என்னை கருமை நிறமாக படைத்தாய்?
மானுடன் என்னை கேலி செய்யவா ?
-ஒரு காக்கையின் வருத்தம்
No comments:
Post a Comment